232. தருணமே பரம சரீரி எனைத்

எனைத் தாங்கி அருள், கருணைவாரி

பல்லவி

தருணமே, பரம சரீரி; எனைத்
தாங்கி அருள், கருணைவாரி.

அனுபல்லவி

உரிமை அடியர் அனுசாரி,-உயர்
எருசலை நகர் அதி காரி, அதி - தரு

சரணங்கள்

1. வரர்[1] அடி தொழும் வெகு மானி,[2]-பரன்-மகிமை ஒளிர் 
    தேவ சமானி,
நரர் பிணை ஒரு பிரதானி,-யேசு-நாயகன் என தெஜமானி, 
    அதி. - தரு

2. ஆதாரம் உனை அன்றி யாரே?-எனை-அன்பாய்த் 
    திருக்கண் கொண்டு பாரே;
பாதாரவிந்தம்[3] கதி சேரே,-இஸ்ரேல்-பார்த்திபன் தவிது 
    வங்கிஷ வேரே, அதி. - தரு

3. நித்த நித்த மாக என்றன் மேலே-வருவ-தெத்தனை துன்
    பங்கள் ஒருக்காலே;
அத்தனையும் நீக்குதற்குன் காலே-எனக்-குத்தம துணைதான்,
    மனு வேலே, அதி. - தரு

4. கங்குல[4] பகலும் துயரம், கோவே;-வரும்-கலக்கம் ஒழித்
    தெனைத் தற் காவே!
பங் கெனக்குத் தந்த மெய் மன்னாவே,-ஏழைப்-பாவியை
    ரட்சியும், ஏசு தேவே! அதி. - தரு

ராகம்: சைந்தவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்


[1] வானோர்
[2] பெரியோர்
[3] பாதமாகிய தாமரை
[4] தோட்டத்தில்